Monday, April 03, 2006

தரிசனம்

நிலையாத வாழ்விலே
நிலையான தேதென்று
நிதம்தேடி நான் அலைந்தேன்!
நீயின்றி வேறேதும்
நிலையில்லை எனக்கண்டு
நிம்மதி நானடைந்தேன்

அலைபாயும் மனமிங்கு
ஆமையாய்த் தன்தலை
அதனுள்ளே புதைத்தவேளை
அங்கு நீ நானாக
நானெனில் நீயாக
அமைந்ததோர் உண்மைகண்டேன்.

-இந்துமகேஷ்

No comments:

Total Pageviews